Saturday, March 12, 2011
டாக்டர் விஜய்யில் இருந்து ஐ.பி.எஸ் விஜய் : பகலவன் படத்தின் கதை
விஜய் நடித்து கொண்டிருக்கும் வேலாயுதம், நண்பன் படத்தை அடுத்து நடிக்க இருக்கும் படம் பகலவன். சீமான் இயக்க, தாணு தயாரிக்க இருக்கிறார்.
டாக்டருக்கு படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை கிடைத்தும் அதற்குப் போகாமல் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சேவை செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். இங்கு உள்ள 20 கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அந்த 20 கிராமங்களை நம்பி மருத்துவமனை நடத்துபவர்களால் விஜய்க்கு பிரச்னை வருகிறது. கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவர் விஜய்யிடம் "அவங்கிட்ட எதுக்குபா உனக்கு வம்பு? பேசாம வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க பாருப்பா" என்கிறார்.
அதற்கு விஜய், வயலில் உள்ள நாற்றங்காலை காட்டி "இது என்ன ?" என்று கேட்கிறார்.
பெரியவர் "நாற்றங்கால்" என்கிறார்.
"இது எதற்கு பயன்படும் ?"
" இது தரும் விதைநெல்லை தான் வயல் முழுவதும் விதைப்போம் "
"சரி.. அப்படி என்றால் இந்த நிலம்.. ? "
" இது எப்பொழுதும் தரிசாவே தான் இருக்கும்" என்கிறார் பெரியவர்.
"அதைப் போல் தான் இப்ப நம்ம நாடே இருக்கு. எல்லாரும் இங்கே படிச்சுட்டு வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கிறாங்க.. நம்ம நாடு எப்பவும் தரிசாவே கிடக்கு!" என்கிறார்.
மேலும் அவரது மருத்துவ சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு எதிராக மருத்துவமனை நடத்தும் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொள்கிறார். ஆபரேஷன் செய்வதில் கைதேர்த்தவரான விஜய்யின் உதவியை அவர்கள் நாடுகின்றனர். விஜய் அவருக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றுகிறார். மனந்திருந்திய எதிர் அணிக்காரர், "எனது தேகம் கிழிஞ்ச உடனே தைச்சுட்ட.. இந்த தேசம் கிழிஞ்சு கிடக்கே... அதை எப்போ தைக்க போற..? " என்கிறார்.
உடனே ஐ.பி.எஸ் படித்து அரசாங்க அதிகாரியாக பணியாற்ற வருகிறார் விஜய். அதன்பின் அரசில் நடக்கும் அநியாயங்களை அரசாங்க அதிகாரியாக இருந்து எதிர்த்து போராடுகிறார். இதுதான் பகலவன் படத்தின் கதை.
தேர்தல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் பகலவனுக்காக.
இன்று தொகுதி ஒதுக்கீடு... ஷூட்டிங்கை கேன்சல்
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.இதனை விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் உறுதிப்படுத்தினாலும், விஜய் மெளனம் சாதிக்கிறார்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையிலும், விஜய் தரப்புக்கு சீட் கொடுத்து தங்களோடு இருத்திக் கொள்ள ஜெயலலிதா விரும்புவதாகத் தெரிகிறது. கூட்டணியின் ஆரம்பகட்டத்திலிருந்து இருப்பவர்கள், தமக்கு ஆதரவானவர்கள் என்றெல்லாம் ஜெயலலிதா பார்ப்பதில்லை. யாரால் அதிக ஆதாயம் கிடைக்கும் என்பதே அவருக்கு முக்கியம். எனவே வைகோ, கம்யூனிஸ்டுகளை தூக்கியெறியவும் அவர் தயாராகவே உள்ளார்.
இந்நிலையில் விஜயை அழைத்து இன்று அல்லது நாளை ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையிலேயே காத்திருக்கிறார்.
அநேகமாக விஜய்க்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்போது, மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் தங்களின் இறுதி முடிவை எடுத்திருப்பார்கள் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!
அதிமுக கூட்டணியில் விஜய் ? - யோசிக்கும் ஜெயலலிதா - தயங்கி நிற்கும் விஜய் !
அதிமுகவில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதி ஒதுக்கப்படலாம். அது இன்றோ நாளையோ இடம்பெறலாம் எனப்பரவலாக ஒரு செய்தி அடிபட்டு வருகிறது. அதிமுக தரப்பில் எந்தவொரு விடயமும் இலகுவில் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், விஜய் தரப்பிடம் அனுகினால் அங்கும் பயங்கர அமைதி காக்கின்றார்கள்.ஆனாலும் தொடர்ச்சியாக எடுத்த முயற்சியில் கசிந்த தகவல்கள் சில. விஜய் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய விஜயை இழுக்கலாம் எனவும், அதன் மூலம் அவரது ரசிகர்களை அதிமகவுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கலாம் எனவும் அதிமுக தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனாலும் விஜயை ஒரு அரசியல் சக்தியாக மாற்றிவிடும் வேலையை அது செய்ய விரும்பவில்லை.இந்நிலையில் ஏற்கனவே அதிமுக ஆதரவாளர்களாக உள்ள விஜய் ரசிகர்கள் இருவருக்கும், விஜயின் தந்தை சந்திரசேகருக்கும் ஒரு தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. இதன் மூலம் விஜயை பெரிதும் முக்கியவப்படுத்தாமல், ஆதரவ என்ற வட்டத்துக்குள் வளைத்துவிட எண்ணுகிறது அதிமுக. இதேவேளை அதிமுகவுக்கு ஆதரவு என்பதில் விஜயின் தந்தை சந்திரசேகர் ஆர்வமாக இருந்தாலும், விஜய் அதிமுகவுக்கான ஆதரவு சரிவருமா என சற்று யோசிப்பதாகவும் சொல்கிறார்கள். அரசியலில் ஈடுபடுவதில் விஜய் ஆர்வம் காட்டி வந்த போதும், அதிமுகவின் வழியில் அதனைத் தொடங்கலாமா என்பதில் அவர் தயங்குவதாகவே தெரிகிறது.
ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் எனும் நிலையில், இதுவெல்லாம் அடிபட்டும் போகலாம். எதுவாயினும் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் நிச்சயம் முடிவு தெரிந்துவிடும். இரு தரப்பு உடன்பாடு உள்ளதென்றால் இன்று அல்லது நாளை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கக் கூடும் என்கிறார்கள். இதே வேளை மற்றெர்ரு புறத்தில், வைகோவின் மதிமுக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுகவில் இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
ரூ.100 கோடியில் தயாராகும் சோழமன்னன் சரித்திரக்கதை; “பொன்னியின் செல்வன்”
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இப்படத்துக்காக நிறைய தேதிகளை ஒதுக்கியுள்ளார். கமலஹாசன் இதை படமாக்க சில வருடங்களுக்கு முன்பு முயன்றார். அது நடக்கவில்லை. தற்போது மனிரத்தினம் கைக்கு வந்துள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதனை திரைக்கதையாக மாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
விஜய் புதிய அவதாரம்
விஜய் – இலியானாவின் ஆச்சரியம்
இந்த புறக்கணிப்புக்கு முடிவு கட்டியிருக்கிறது நண்பன். ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் இலியானா விஜய்யின் ஜோடி.
இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர். அதன்பிறகு இலியானாவின் வாயிலிருந்து வருவதெல்லாம் விஜய் புகழ்தான். விஜய் இவ்வளவு இனிமையா, ஹியூமரா இருப்பார்னு நான் நினைக்கவேயில்லை. அவர்கூட வொர்க் பண்றது ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு… இதேபோல் இன்னும் நிறைய.
இலியானாவின் போக்கைப் பார்த்தால் விஜய்யின் அடுத்தப் படத்திலும் இடம்பிடிப்பார் போலிருக்கிறது.
விஜய் சென்னைக்கு விரைந்த ரகசியம்!
அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா ?
அதன் பின் அமைதி காத்து வந்தவர் "வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடப்பு அரசியலை சாடும் வகையில் வசனங்கள் இருந்ததாகவும், ஆனால் சில நிர்பந்தங்கள் காரணமாக சில வசன காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் "வேட்டைக்காரன்' எதிர்பார்த்த வெற்றியை விஜய்க்கு பெற்றுத் தரவில்லை.அதைத் தொடர்ந்து வெளியான "சுறா' படமும் தோல்வியைத் தழுவியது.அதன் பின் கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்திய விஜய் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "பாடிகார்ட்' என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார். சித்திக் இயக்கத்தில் "காவலன்' என்ற பெயரில் இந்தப் படம் உருவானது.
இந்த சமயத்தில்தான் விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுடன் நடந்த இந்த சந்திப்பு அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, அதுவே "காவலன்' ரிலீஸýக்கு தடைக் கல்லாகவும் மாறியது.ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு காரணமாக "காவலன்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட நாளில் படம் வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி படம் ரிலீஸôனது.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்பில் இருந்த பொருளாதார பிரச்னைகள் ரிலீஸ் தாமதமானதற்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டாலும், ஆளும்கட்சிதான் படத்தை வெளியிட முடியாமல் தடை செய்ததாக விஜய் தரப்பு புகார் தெரிவித்தது.இதை தன்னுடைய அடுத்தடுத்த பேட்டிகளில் மறைமுகமாக விஜய் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பு மௌனம் காக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவானது.
இந்த சூழலில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து அவரது மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜய் "தமிழக மீனவனின் மேல் விழும் ஒவ்வோர் அடியையும் என் மேல் விழும் அடியாக நினைத்துப் போராடுவேன்' என்றார். இந்தப் பேச்சு விஜயின் அரசியல் குறித்த பார்வையை இன்னும் தெளிவாக்கியது. ஆனால் அதன் பின் அரசியல் குறித்து பேசாமல் தவிர்த்து வருகிறார் விஜய்.இந்நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.
ஜெயலலிதாவும் அவரது மக்கள் இயக்கத்துக்கு தொகுதிகள் ஒதுக்க விரும்புவதாகவும், ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருப்பதால்தான் விஜய் தரப்புக்கு அழைப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயை அழைத்து ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில் காத்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பொன்னியின் செல்வன்: ஆர்யாவும் நடிக்கிறார்!
இந்த நிலையில், இப்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்குகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், விஷால், மகேஷ்பாபு போன்றோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.இதுவரை விஜய், மகேஷ்பாபு ஆகியோர் மட்டும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விக்ரம் நடிக்கும் பாத்திரத்தில் நான் நடிக்க தயார் என்று சூர்யா கூறியதால், அந்த வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
விஷால் நடிக்கிறாரா இல்லையா என்பதும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், பொன்னியின் செல்வனில் புதிதாக நுழைந்திருக்கிறார் ஆர்யா.படத்தில் இவருக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்துக்கு ஆர்யாவை அழைத்திருந்தார் மணிரத்னம். கதையைக் கேட்ட உடனே சம்மதித்த ஆர்யா, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
Friday, March 11, 2011
Anushka in ‘Kavalan’ Telugu remake
Vijay heads to Vishakapatinam
Thursday, March 10, 2011
விஜய் ரோலில் வெங்கடேஷ்
சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'காவலன்' திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. 'காவலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.
விஜய், விக்ரம் படத்தின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய், விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் பட்ஜெட் 207 கோடியாம், அம்மாடியோவ்! டைரக்டர் வஸந்த், மணிக்கு அசோஸியேட்டாக இந்தப் படத்தில் பணியாற்றுகிறார். சரித்திர காலப் படம் என்பதால், அதில் முக்கியமான ரோலில் நடிக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நீளமாக முடி வளர்க்கச் சொல்லியுள்ளாராம் மணிரத்னம்!.
ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
ஜெயலலிதா வெளியிட நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்ட திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.மேலும், அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்களையும் திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இது தேர்தல் பிரச்சார மாநாடாக அமையும் என்பதால் ஜெயலலிதாவும் இந்த விழா மீது தனிக்கவனம் வைத்திருக்கிறாராம்
Jayalalithaa and Vijay on same stage?
All those make the SAC film a hot one. Sources say if Jayalalithaa agrees to come for the event then Vijay and director Shankar will receive the first CD from the former chief minister.
இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய்
பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.

ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும், டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் ஒரே மேடையில் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!
Wednesday, March 9, 2011
அதிமுக கூட்டணி விக்கிபீடியா செய்தி
விஜய் பிரச்சாரம் செய்ய அதிமுக ஹெலிகாப்டர்
Vijay is a nice guy: Ileana
Ileana bought her ticket for Tamil cinema in ‘Kedi’, but the film’s failure forced her to stay away from Kollywood. She however became a hot property in Telugu, by acting opposite all top heroes.‘Nanban’, directed by Shankar, is a remake of Hindi hit ‘Three Idiots’. The Tamil version has Vijay, Srikanth and Jeeva in lead roles. “Shankar is so down-to-earth. Working with him is pleasure,” Ileana said earlier.
AIADMK to give Vijay 3 seats?
Kollywood circles are abuzz as Ilayathalapathy Vijay is plunging into politics. Sources close to AIADMK has confirmed that Vijay who is now in Dehradoon shooting for Nanban will meet Jayalalitaa long with his father SA Chandrasekhar shortly.A leading newspaper has quoted a senior AIADMK leader as saying: " Vijay's party Vijay Makkal Iyakkam (VMI) is likely to get three seats in our front. Vijay doesn't want to contest but his father SA Chandrasekhar wishes to contest from Pudukottai. Both Vijay and SAC will campaign for our party."
Vijay’s Makkal Iyakkam to get 3 seats?
Tamil cinema and Tamil Nadu politics are like two sides of a coin. That too with the Assembly elections nearing, you just can’t separate these two powerful entities, which go hand in hand for decades.Coming to the latest buzz, Vijay’s Makkal Iyakkam, which is said to be the actor’s launch vehicle for his political entry, is all set to face the elections by joining hands with the main opposition AIADMK.“In all probability, the AIADMK leadership may allot three seats to Vijay’s outfit. The actor will not contest the polls. However, he may tour the whole State campaigning for the alliance,” sources say.“Two important office bearers of the Makkal Iyakkam and Vijay’s father S A Chandrasekar will fight the elections on behalf of the Ilaya Thalapathi,” they add. Remember Vijay recently came down heavily on the ruling DMK for allegedly posing hurdles to his film ‘Kavalan’.
Vijay is indeed into politics!
அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது ஏராளமான ரசிகர்கள் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Tuesday, March 8, 2011
Will it be Vikram or Suriya?
The cast for Mani Rathnam’s next film, his take on Kalki’s much loved Ponniyin Selvan is getting finalized. Vijay has landed in the important role of Vallavarayan Vandiyathevan, an impish young man whose adventures form the crux of the plot. Telugu superstar Mahesh Babu, fondly called the Prince is going to play Prince Aditha Karikalan, the troubled heir to the Chozha throne, thwarted in love and doomed to die young.Vikram and Suriya are in the running for the title character, Ponniyin Selvan which is the title conferred on Arulmozhi Varman who becomes famous as Raja Raja Chozhan. Looks like Mani Ratnam is set to achieve a casting coup of all sorts. The two stars will be ready give an arm or a leg for a chance to portray this remarkable character from our proud heritage. We can’t wait to see who gets this role!
அதிமுக ஆதரவு போஸ்டர்: சேலத்தில் விஜய் ரசிகர்களிடயே மோதல்
சேலத்தில் அதிமுக ஆதரவு போஸ்டரால் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.நடிகர் விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று காலை பரபரப்பு நிலவியது
Shankar’s Nanban completes 2nd schedule today

The unit of Nanban has canned some important sequences on the lead cast and it is heard that Jeeva and Srikanth has enjoyed each and every shot while shooting. After many speculations and discussions Vijay has joined the unit in Dehradun a week days ago for the first time. Music director Harris Jayraj has come up with 4 different songs with the same catchy phrase All is well. Nanban is the remake of Hindi blockbuster film 3 Idiots.
Actor Jeeva tweets “And Nanban shooting is been awesome! Lifetime experience for me to work with all the legends like Shankar sir Sathyaraj sir n Ilayathalapati. I and Srikanth are enjoying every bit of this shoot. Just sad that the schedule is finishing today but happy in a way that I’ll get to meet Ma family.”
Monday, March 7, 2011
மணிக்கு உதவிய கமல்!

Sunday, March 6, 2011
மக்கள் இயக்கதின் நாகப்பட்டினம் மாநாடு - NEW VIDEO
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பகவலன்'. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
ஜெயலலிதா - நடிகர் விஜய் சந்திப்பு:கிராபிக்ஸ் படம் வினியோகம்
அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் விஜய் மலர் கொத்து வழங்குவது போல, கிராபிக்ஸ் மூலம் தயார் செய்த புகைப்படம், சேலத்தில் அ.தி.மு.க., வினருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஜுரம் சூடுப்பிடித்துள்ளது. பிரதான கட்சிகள், தேர்தல் நேரத்தில், நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம். அரசியல் பிரமுகர்களின், நெருக்கடிக்குள்ளாகும் நடிகர்கள், தாமாகவே கட்சிகளில் தங்களை இணைத்து கொள்வர்.கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. விஜய் நடித்த படங்களை தியேட்டரில், திரையிடுவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதனால், விஜய் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சூழலில், விஜயின் தந்தை சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவை சந்தித்தார்.அதனால், நடிகர் விஜய் விரைவில், அ.தி.மு.க., வில் சேரப் போகிறார் என்ற தகவல் பரவியது. சமீபத்தில், இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாகபட்டனத்தில், விஜய் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அ.தி.மு.க., தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு மலர் கொத்து வழங்குவது போல கிராபிக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட புகைப்படம், சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தொண்டர்களிடம் பரவலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)