பொன்னியின் செல்வன்: சிங்கள புத்த பிக்குவாக சத்யராஜ்!
மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் சத்யராஜ். படத்தில் இவருக்கு தரப்பட்டுள்ள வேடம் புத்த பிக்கு. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில், இலங்கையில் உள்ள சிங்கள புத்த பிக்குகள் இணைந்து ராஜராஜ சோழருக்கு மணிமகுடம் சூட்ட முயற்சிப்பார்கள். அதில் வரும் முக்கியமான தலைமை பித்த பிக்கு வேடம் சத்யராஜுக்கு தரப்பட்டுள்ளதா, அல்லது சூடாமணி விகாரத்தின் தலைமை புத்த பிக்கு வேடம் தரப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, இந்தப் படத்தின் இணை இயக்குநராக தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி மணிரத்னத்திடம் கேட்டு சேர்ந்துள்ளாராம் இயக்குநர் வசந்த்.இவர் ஏற்கெனவே பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுத முயற்சித்தவர் என்பதால் அவரது பங்களிப்பு படத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறாராம் மணிரத்னம்.விஜய், அனுஷ்கா, ஆர்யா, மகேஷ்பாபு நடிக்கும் ரூ 100 கோடி பட்ஜெட் படம் இது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE
No comments:
Post a Comment