Pages

Wednesday, February 16, 2011

விஜய்யுடன் - அதிமுக பிரமுகர்கள் சந்திப்பு


நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்துவருகிறது.படப்பிடிப்பு முடிந்ததும்  விஜய் தனது “காவலன்” படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார். 


பின்னர் விஜய் தியேட்டருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 


‘’ நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங் கண்ணா... சொல்லுங் கண்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம். 
ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’’ என்று ரசிகர்கள் முன் பேசினார் விஜய்.


அ.தி.மு.க.வினரும் விழாவில் பங்கேற்றனர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணாடிமணி, அருணாசலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கிற முருகானந்தம் ஆகியோர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்தனர்.

Thanks : Nakkeran.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment