Pages

Saturday, February 26, 2011

நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் - தேர்தலில் சந்திரசேகர் போட்டியிடலாம்


அதிமுக கூட்டணியின் அடுத்த அதிரடியாக, கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கமும் இணைந்து கொள்வதாக இருக்கலாம் எனத் தமிழக அரசியல் வட்டாரத் தகவல்கள்
சில தெரிவிக்கின்றன. அரசியலில் இணைவது நடிகர் விஜயின் எண்ணமாக இல்லாதிருப்பினும். தந்தை சந்திரசேகருக்கு மகனை அரசியலுக்குள் கொண்டு வரும் எண்ணம் மிகத் தீவிரமாக இருந்ததாகச் சொல்கின்றார்கள்.
நடிகர் விஜய் ரசிகர் மன்றம் இதன் காரணமாகவே, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது என்றும் கூறுகின்றார்கள். இதனை மோப்பம் பிடித்தக் கொண்டதனால்தான் திமுக தரப்பிலிருந்து விஜய் படங்கள் மீது கடுமையான ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக முன்னர் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவைச் சந்திர சேகர் இரு தடவைகள் சந்திதுப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக அன்மையில் நாகையில் மீனவர் படுகொலைக்கான கண்டனக் கூட்டத்தை விஜய் மக்கள் இயக்கம் ஒழுங்க செய்ததும்,  இந்த அரசியற் பிரவேசத்தின் முக்கிய நகர்வுகள் என்கிறார்கள்.

இம்மறை தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிட்டாலும், விஜய் நேரடியாக அரசியலில் இறங்கமாட்டார் எனவும், ஆயினும் விஜயின் தந்தை சந்திரசேகரன் தேர்தலில் நிற்கக் கூடும் எனவும், எதிர்பார்க்கப்படுவதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சார மேடைகளில் விஜய் தோன்றி அதிமுகவிற்காக வாக்கக் கேட்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

இவை குறித்த விபரங்கள் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்களாக இருப்பினம், ஊகங்களாகவே உள்ளதாகவும், ஆயினும் இவை உண்மையாக இருக்குமாயின் இன்னும் சில தினங்களில் இது தொடர்பானா அறிவிப்புக்கள் வெளிவரலாம் எனவும், அது அதிமுக கூட்டணியின் அடுத்த அதிரடியாக இருக்கும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Friday, February 25, 2011

அதிமுக கூட்டணியில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு 10 சீட்?!

விஜய்யின் மக்கள் இயக்கமும் இந்தத் தேர்தலில் தனது பலத்தைச் சோதித்துப் பார்க்க ஆசைப்படுகிறது.
இதன் விளைவாக அவரது ரசிகர்கள் சிலர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. ஏராளமான ரசிகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர்.

அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது. இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். இந்த சந்திப்பின் நோக்கமே சீட்டு கேட்பதுதான் என்று இப்போது தெரியவந்துள்ளது.விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரனும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, "ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும்", என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது.

இவற்றில் ஒரு தொகுதியில் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் போட்டியிடுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்


நாகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை

நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.

அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும். 

நான் 51  படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.

வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...

ரத்தத்தின் ரத்தமே...
எனது உடன்பிறப்பே...
சொந்தத்தின் சொந்தமே... 
நான் இயங்கும் உயிர் துடிப்பே!
 
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே... 
என் வாழ்க்கை உனக்கல்லவா! 
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்...  
என் வாசம் உனக்கலாவா..

நன்றி: நக்கீரன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

VIJAY - KING OF CHENNAI


atm-kuruvi-23-02-11First of all congrats to Ilayathalapathy Vijay and director Siddique for giving us all a marvelous love story (Kavalan). Even 5 weeks after release of the film, it is said to have more than 70% occupancy in theatres. No doubt the next few years are going to be the peak in Ilayathalapathy`s career with excellent top directors in his pocket. But what was the reason for his consecutive flops in the past, did these films really go bad in collections? Let us have an outlook. Ilayathalapathy Vijay was constantly criticized for his films from ATM till SURA. The fact to be accepted that these five releases  ATM,KURUVI,VILLU,VETTAIKARAN,SURA  had few irrelevant or over exacerbate scenes which led to the negative feedbacks from the audience. In discussion with each film,

ATM: 
Azhagiya Tamizh Magan , one of the Vijay`s films with a strong story lineup. Of course this film was a flop. On thinking where it went wrong, the entire fault goes upon the director. ATM was a much expected Vijay movie particularly for Vijay`s dual role. Over expectations of seeing two Vijay sharing the screen is what made the movie to travel in the wrong side. Climax another big draw-back for the film. Even with the excellent music from the Oscar winner the film was declared a flop because of poor direction.

Key Comment: Poor screen shot when 2 Vijay appear on the screen (ie) Poor direction.

Kuruvi:
It was again a much awaited movie because of the Gilli crew. One or two over exaggerated scenes applied strong brakes to the movie to reach the box office. Even block buster movie Gilli had one such scene in which Vijay jumps from terrace to terrace. But a strong screen play of Gilli made those scenes necessary. But that was not the case with Kuruvi , a scene where Vijay jumps from the terrace to catch a fast moving train was something which even Vijay fans did not accept. Overall excluding certain scenes the movie could have been made better. 

Key comment: Few unwanted exaggerated scenes.

Villu:
The film as whole had many drawbacks but as usual Vijay`s performance was admirable and impressive. The reason why Vijay accepted this movie is a big question mark.

Key comment: No storyline up.

Vettaikaran:
“This film broke the collection record of Ayan for Sun pictures for that year”, this was quoted by Sun pictures officially. This film was declared as a flop even after a massive collection record by the same sun pictures later. This is where political plays on Vijay started. Drawback of the movie was its stunts and Telugu essence in the movie. Overall the movie was above average and a 100% entertainer.

Key comment: 100% entertainer and WAS NOT A FLOP, AN ABOVE AVERAGE 
MOVIE.

Sura:
Worth to be declared a flop. Dance choreographers are the only people who used Vijay`s talent for Sura. Rest of the crew members sailed on Vijay`s star power which includes the director (Captain of the ship).

Key comment: Vijay should stop giving chances for such directors.

At last, Vijay crossed several hurdles and finally made his return with KAVALAN. Even though these five films were declared flop, they did not fail in returning the investment. Every single film managed to save its producers, distributors and theatre owners. The reason, it is a Ilayathalapathy`s movie.

Aravind Kumar R

Thanks : Behindwoods
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்


மூன்று முறை அதிமுக தலைமையை சந்தித்துவிட்டார் எஸ்.ஏ.சி. இன்னும் முப்பது படங்களில் நடித்துவிட்டுதான் விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் நான் அதற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் அவர். இந்த விளக்கம்இதற்காகதான் அவர் ஜெ.வை சந்தித்தாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது மக்களிடம்.

என் பிள்ளைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்'கொடுப்பாரோ?

பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்குஎன் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால்அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!

Thanks : vizhiyepesu
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, February 24, 2011

தளபதியின் முழக்கம் புகைப்படம்

Ilayathalapat
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் - வேட்டைக்காரன் தெலுகில் புலி வேட்டையாக ரிலீஸ்


Tamil star Vijay and awesome beauty Anushka starrer ‘Puli Veta’ (dubbed version of Tamil film Vettaikaaran) is ready to hit the screens. Release is planned in the first week of Mar.
The film (Vettaikaaran) is directed by debutant B. Babusivan and produced by M Balasubramanian and B Gurunath Meiyappan under prestigious AVM Productions banner and distributed by Sun Pictures. Renowned production designer M.V. Gopala Rao is presenting the Telugu version on Jyothi Arts Banner.  



Real Star Srihari played a key role (as a sincere police officer) in the film. Other cast includes Sayaji Shinde, Salim Ghouse, Sanchita Padukone, Sathyan, Sai Kumar, Srinath, Cochin Haneefa, Delhi Ganesh, Jason Sanjay and Madalasa Sharma (in a cameo appearance). 

The film has dialogues written by Shashank Vennelakanti, music composed by Vijay Anthony and lyrics penned by Bhuvanachandra, Vennelakanti and Vanamali. Gopinath handled cinematography while editing is done by V T Vijayan.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் மக்கள் இயக்கம் கண்டன பொதுக்கூட்டம்


டாத மழை... நாகை காடம்பாடி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள். ஓயாத விசில் சத்தம், கட்டுப்படுத்த முடியாத கூட்டம்,  கொட்டும் மழை... மேடைக்கு இன்னும் வராத விஜய்! இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

நேரம் சென்று கொண்டே இருக்க... மழைக்காக இனி ஒதுங்க முடியாது என தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை காண மேடைக்கு வந்துவிட்டார் விஜய். காதைக் கிழிக்கிறது ஆரவாரங்கள். ரசிகர்களுக்கு கையசைக்கிறார் விஜய்! அடங்காத விசில் சத்தம்... ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறார் விஜய். மேடைக்கு முன்பாக விஜய்யை நோக்கி நகர்கிறார்கள் ரசிகர்கள்... உற்சாகமாகிறார் விஜய். 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது... கொட்டும் மழையில் இடி என முழங்கினார் விஜய்.

நாம் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டாமா என்று சொன்னபடியே எடுத்து விட்டார் ஒரு பாட்டு... நான் அடிச்சா தாங்க மாட்ட! நாலு மாசம் தூங்க மாட்ட! மோதிபாரு வீடு போய் சேர மாட்ட! சொல்லவா வேண்டும், விண்ணைப் பிளக்கிறது விசில் சத்தம்!  

இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் என்று தொடர்ந்தது முழக்கம்.
வேலாயுதம் படத்தில் எனக்கு பிடித்தப் பாட்டு இது என்று சொன்ன விஜய், ரத்ததின் ரத்தமே... என்று ரசிகர்களை கைகாட்டி பாடத் துவங்கினார்.  

ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று பேச்சை முடித்தார்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மீனவர்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்

vijay
தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கைக்கு அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள் மீனவர்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று நாகையில் நடிகர் விஜய் பேசினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. விஜய் தந்தையும் "விஜய் மக்கள் இயக்கத்தின்' பொதுச்செயலருமான இயக்குநர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார்,பாண்டியன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியும் 10 மீனவர்கள் குடும்பத்தினருக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியும் நடிகர் விஜய் பேசியதாவது;
மீனவர்களுக்கு கடல் தான் தாய்,கடல் மாதாவை மீறி மீனவர்களை இலங்கை தாக்குகிறது.இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மீனர்வர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புரியவில்லை.இத்தகைய தாக்குதலை தாங்க முடியாமல் வேதனை கலந்த உணர்வோடு வந்திருக்கிறேன். இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
இங்கு நாம் அனைவரும் முக்கிய குறிக்கோளுடன் கூடியுள்ளோம்.கோழைகள் இல்லை அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள்.மீனவர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என்மீது விழும் அடியாக உணர்கிறேன்.நாம் ஏதோ வந்தோம் கூடினோம்,சென்றோம் என்று இருக்கக் கூடாது.நமது எதிர்ப்பை பதிவு செய்ய இன்றே அனைவரும் பிரதமருக்கும்,தமிழக முதல்வருக்கும் இலட்சக்கணக்கான தந்திகள் அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் தந்திகள் நாளை பிரதமர் முதல்வர் வீட்டு கதவை தட்ட வேண்டும்.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார்,பாண்டியன் ஆகியோருக்காக நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.
நாகையில் நடிகர் விஜய் பொதுக்கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகையில் "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் செவ்வாய் காலையிலிருந்து வாகனங்களில் வரத்துவங்கினர்.இதில் அனைவருமே 15 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். பஸ்கள்,வான்கள்,கார்கள் மற்றும் ஆட்டோவில் வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியால் கூச்சல் போட்டுக்கொண்டு சாலைகளில் ஆர்ப்பரித்து பொதுமக்களை கலங்கடித்து சென்றனர்.
தினமலர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, February 23, 2011

நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்


நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய் வீரவசனம்இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் 4 மணிக்கு திடீரென நாகையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காடம்பாடி மைதானத்தில் ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர். 

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மாலை 5.30 மணி வரையும் நடிகர் விஜயால் மேடைக்கு வர முடியவில்லை. 5.35 மணியளவில் மழைலேசாக தூறியதை தொடர்ந்து 5.45 மணிக்கு நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். 

அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது மேடை முன் திரண்டிருந்த ரசிகர்கள் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு திரும்பினார். 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நாகை: விஜய் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூச்சல்;


மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


மழை வேறு பெய்துவருவதால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்து கோபமடைந்த விஜய், கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறினார்.


இன்னும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க கொட்டும் மழையிலும் இருந்தார்கள்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay’s telegram technique


It was a time-tested strategy of Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi to send telegrams to New Delhi to press the Union government on various issues.
On Tuesday, Vijay, addressing a protest in Nagapattinam to condemn the killings of Tamil fishermen, urged his fans to send telegrams to Karunanidhi and also to Prime Minister Manmohan Singh, over the issue.
Accusing the Centre and State governments of being mute spectators to indiscriminate attacks on fishermen, the ‘Ilaya Thalapathi’ said Tamils should come together whenever there is a problem to fellow Tamils.
Meanwhile, frenzied fans scrambled on to the stage and when the crowd got unmanageable, police used mild force to keep them away. Even Vijay got irked at one point of time and walked out of the stage. Later, office-bearers of his Makkal Iyakkam pacified the actor and brought him back to the stage.

Thanks : IndiaGlitz
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மீனவர்கள் நலன் காக்க பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும்: விஜய் கோரிக்கை

மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

அத்துடன் மழை பெய்ததால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்த விஜய் கோபமடைந்தார். கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார்.
பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேச விஜய் வந்தார். மாலை 7 மணிக்கு பேச ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். முதலில் கொடுமைப்படுத்தினார்கள். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை காக்க போராடுவோம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். மீனவர்கள் நலன் காக்க மத்திய மாநில அரசுக்கு ரசிகர்கள் தந்தி அனுப்ப வேண்டும். பிரதமர் வீட்டில் தந்திகள் குவிந்து இருக்க வேண்டும் என்றார்.


பின்னர் அண்மையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோரின் குடும்பத்து:ககு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார்.

நன்றி: நக்கீரன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்காதது ஏன்? - விஜய்



தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் நடிகர் விஜய்.


இலங்கை கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகை, காடம்பாடி திடலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :


தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனை.

கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.

தந்தி அனுப்புங்கள்: கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி (பிப். 23 முதல்) அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, February 22, 2011

தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறார்

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
தேர்தலில் ஆதரவு  யாருக்கு?
விஜய் நாளை அறிவிக்கிறார்தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில்    நாகை வழிவலம் தேசிகர் பாலி டெக்னிக் அருகில் நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விஜய் தலைமை தாங்குகிறார்.  தமிழகம் முழுவதும் இருந்து விஜய்யின் ரசிகர்கள்  திரள்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு மண்டலம் வாரியாக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டது.
 
நாகை ஆர்ப்பாட்டத்தில்  ஆயிரக் கணக்கான வாகனங்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு முதலே ரசிகர்கள் நாகையை நோக்கி புறப்படுகிறார்கள். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்தபோது போரை நிறுத்தக்கோரி சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்தார்.
 
இப்போது நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கி கட்சி தொடங்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்குவதை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலிலேயே விஜய் தனது அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 3 முறை சந்தித்து உள்ளார். எனவே அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
 
இதை எதிர்பார்த்து திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஆங்காங்கே ஜெயலலிதாவுடன் விஜய் நிற்கும் பட  பேனர்களை வைத்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay gears up for his first public meeting


VijayIlayathalapathy Vijay is all set for his first public meeting tomorrow. In a bid to enter politics, he is gearing up to address the people on the Tamil fishermen issue at VTP College Grounds, Nagapattinam.

Vijay will be accompanied by his father SA Chandrasekhar and he is backed by Jayalalitha's AIADMK. The actor, who revealed to a Tamil publication that a few people from the ruling party troubled him duringKaavalan release, will be raising his voice against the ruling party for failing to protect the lives of the fishermen. 

However, Vijay has postponed his political entry for four years but has decided to involve indirectly by supporting his father SA Chandrasekhar. Meanwhile, the actor is busy with Shankar's Nanban, a remake of Bollywood movie 3 Idiots. He has also reportedly signed Mani Ratnam's historical movie Ponniyin Selvan.

Thanks: OneIndia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay’s statement on Nagapattinam rally


Vijay is all set to make his first big move towards plunging in politics. The actor will address a large public meeting in Nagapattinam condemning the Srilankan navy’s killing of Tamil fishermen and also the apathy of Indian government in protecting the Tamil fishermen. 
 
This will be his first ever public meeting after his political inclinations were made public. The whole event is expected to have large political tones as Vijay’s father SA Chandrasekaran had met AIADMK supremo J.Jayalaithaa for the second time a few days ago.
 
In a statement released today, Vijay had called upon his fans and all general public to join him in the protest meeting. He has said that the eight crores Tamils living in this world will rise up together to support if anything happens to even one Tamil anywhere in the world.
 
Vijay will address the protest meeting from the VTP College Grounds in Kadanpady Road, Nagapattinam at 4pm.

Thanks : IndiaGlitz
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மீனவர்கள் மீது தாக்குதல் நாகையில் நடிகர் விஜய் இன்று ஆர்ப்பாட்டம்


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 

இதுபற்றி நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடித்து சென்று சித்ரவதை செய்வதும் அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.

அவர்களின் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து, அவர்களுக்காக குரல் கொடுக்க நினைத்தேன்.  அதற்காக, இன்று மாலை, 4 மணியளவில் நாகப்பட்டினம் காடம்பாடி வி.டி.பி கல்லூரி மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயம் மீது திசை திருப்ப, ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.  எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், நிதியுதவி வழங்கி விஜய் பேசுகிறார்.

நன்றி : தினகரன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, February 21, 2011

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க...! - விஜய் அறிக்கை

Vijayதனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 'சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்', என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம். 
கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.
அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். 

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும். 

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

Thanks : OneIndia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!


Vijayதமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாளை நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.


தமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.


இந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay-All set for his political entry!

After dilly dallying for months,Ilayathalapathi Vijay is all set to enter the murky world of Tamilnadu politics. Vijay will be making his first political foray tomorrow (February 22) at a public meeting in Nagapattinam.Vijay will be speaking about the explosive issue of the "attitude of Sri Lankan government towards Tamil Nadu fishermen".

The TN fishermen issue is a very sensitive issue in coastal Tamil Nadu as it has resulted in the death of local fishermen in the hands of the Sri Lankan army.  In a recent interview to a Tamil tabloid, Vijay has hit out at the DMK government and the way the first family is controlling Kollywood.  

Remember how Vijay went through hell trying to release his Pongal filmKaavalan. To drum up support with opposition parties for the Nagapattinam meet, Vijay father SA Chandrasekhar met up with ADMK supremo J Jayalalithaa at her Poes Garden residence on Saturday.  

He wanted the support of Jayalalithaa and her party for the protest meet.

Thanks : Sify
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, February 20, 2011

ஜெயலலிதாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.


 கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.


 மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து விஜயின் மக்கள் இயக்கம், வரும் 22-ம் தேதி நாகை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

வந்தியத்தேவனாக விஜய்.........


கடந்த பத்து நாட்களுக்கு முன்பே நம் காதுகளை எட்டிய தகவல்தான் என்றாலும் இது புரளியாகவும் இருக்கலாம் என்று மணிரத்திரனம் அலுவலகமான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொல்லட்டும் என்று காத்திருந்தோம். இப்போது மிகவும் நம்பிக்கையான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் அந்த வதந்தியை உறுதி செய்கிறது. ஆமாம்! மணிரத்தினம் சன் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில், அந்த நாவலின் முதன்மைக் காதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனாக இளைய தளபதி விஜய் நடிப்பது 90% உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விஜய்க்கு பொன்னியின் செல்வன் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவரது அப்பா எஸ்.ஏ.சி மூலம் பொன்னியின் செல்வன் கதை சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு எஸ்.ஏ.சியின் முன்னாள் உதவியாளர்களில் ஒருவரான வருண் என்பவர் மிகவும் உதவியதாகவும் தெரியவருகிறது.

விஜய்க்கு வந்தியத்தேவன் என்றால் நாவலின் தலைப்பான பொன்னியின் செல்வனாக அதாவது ராஜாராஜ சோழனாக சியான் விகரம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ராவணன் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு பொன்னியின் செல்வன் ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலை படிக்கக் கொடுத்து இதிலில் உள்ள நான்கு முக்கிய காதாபாத்திரங்களில் உனக்கு எது வேண்டுமோ நீயே தேர்வு செய்து கொள் என்றாராம் மணி. இப்படி விக்ரமே தேர்வுசெய்த கதாபாத்திரம்தான் ராஜராஜன் என்கிறார்கள். அதேபோல விஷாலும் ஒரு பாத்திரத்தில் நடிப்பார் என்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உத்தமச்சோழனாக (மதுராந்தகத் தேவர்) நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது.

இந்தப் பட்டியல் நம்பகமான வட்டத்திலிருந்து கிடைத்தாலும், அதிகாரபூர்வமாக உறுதி செய்ய்யும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் HIT

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் சூடு பிடித்திருக்கின்றன

மணிரத்தினம்- சன் பிக்ஸர் கூட்டுத்தயாரிப்பாக பலநூறு கோடியில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைவடிவம் பெற இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மணிரத்தினம் அலுவலகத்தில் விசாரித்தால், 

தற்போது இது ஸ்கிரிப்ட் என்ற கட்டத்தில்தான் இருக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து ஸ்கிரிப்டை இறுதிபடுத்தி வரும் மணி ரத்தினம், 

திரைவடிவத்துக்காக நாவலின் சம்பவங்களில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆலோசித்து வருகிறாராம். இந்தப்படத்தில் விகரம் மட்டுமே தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. 

மேலும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்க இருக்கிறார் என்று வெளியாகும் தகவல்கள் பற்றி இப்போதைக்கு மனி அலுவலகத்தில் வாயைத்திறக்க மறுக்கிறார்கள்.  

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE