Pages

Saturday, February 5, 2011

விஜய், விக்ரம், விஷாலை இணைக்கும் மணிரத்னத்தின் புதிய படம்!



விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியுடன், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். எது எப்படியோ அவரது ரசிகர்களின் பிபியை மேலும் ஏற்றப்போகும் செய்தி இது. ஆம்..

எல்லா மொழிகளிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது நடந்து வருகிறது ஆனால் தமிழில் மட்டுமே அது கை கூடாத நிலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் என்பதால் இவர்கள் சேர்ந்து நடிப்பதே இல்லை. 

ஒரு காலத்தில் விஜய்யும்  அஜித்தும் சேர்ந்து நடித்தார்கள், ஆனால் இன்று அது சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனம். மங்காத்தா மூலம் மல்ட்டி ஸ்டார் படம் என்ற பேருடனேயே ஆரம்பிக்கப்பட்ட படம். அதில் நடிகர்கள் இன்று வரை சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இன்னும் ஒரு மல்ட்டி ஸ்டார் படம் வரப்போகிறது. இதற்காக தீவிரமாக திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறார் மணிரத்னம். இந்தப்படத்தில், விஜய், விக்ரம், மற்றும் விஷால் நடிக்க இருப்பதாக செய்திகள் வட்டாரம் சொல்கிறது. மற்ற அனைத்து டெக்னிக்கல், நடிகர்களுக்கான தேர்வும் நடந்து வருவதாக சொல்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்.
 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay, Vishal, Vikram in Mani Ratnam's film


Veteran filmmaker Mani Ratnam, sources say, has decided to cast Vijay, Vishal and Vikram in his next film. The director is getting the script ready for his next film and is penning it down with these three stars in mind.vijay-vishal-05-02-11

Mani Ratnam is one of the few directors who cast multi-heroes in his films and tasted success in films like Agni Natchathiram, which had Karthik and Prabhu; Iruvar, which saw the coming together of two legends Mohanlal and Prakash Raj and Thalapathy which had two superstars Rajinikanth and Mammootty.
This time the ace director will be instrumental in bringing the three current biggies of Kollywood together – Vishal, Vikram and Vijay.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால் !


Manirathnamஇரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில். 

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!





YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

தேர்தல் களத்தில் நடிகர் விஜய் ?


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான "காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் "காவலன்' திரையிடப்பட்டது.

பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து ""அரசியலுக்கு வரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நேரமும், காலமும், சூழலும் என்னை அந்த இடத்துக்கு அழைக்கும்போது நிச்சயம் என்னை அங்கு  வைப்பேன்'' என்றார் விஜய்.

"காவலன்' பட பிரச்னையில் ஏன்? எதற்கு? யார்? என்றே தெரியாமல் இருக்கிறேன். யாரென்று தெரிந்தால் நானே வீதியில் இறங்கிப் போராடவும் தயார் என்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஆளுங்கட்சி தரப்பை மறைமுகமாகச் சாடினார் அவர்.

அப்போதும் தன்னுடயை அரசியல் பிரவேசம் குறித்த தெளிவான கருத்தை விஜய் முன் வைக்கவில்லை.

ஆனால் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளும், விசுவாசிகளும் இந்த  சட்டப்பேரவை தேர்தலில் நம்முடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும், இதுவே அரசியலுக்கு வருவதற்கு சரியான தருணம் என விஜய்யிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன? அதிமுகவுக்கு விஜய் ஆதரவு  உண்டா? விஜய் பிரசாரம் செய்வாரா?

இந்த பின்னணியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Friday, February 4, 2011

விஜய் கலைஞர் டிவி Interview

HI Friends

Click the below link to see our thalapathis latest interview



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay doing cameo in Sattappadi Kuttram!


VijayIlayathalapathy Vijay, who is on cloud nine after the success of Kaavalan, is said to be doing a cameo in his father SA Chandrasekhar's Sattappadi Kuttram. He will appear in a scene, which lasts for a few minutes.

Sattappadi Kuttram is a remake of blockbuster Sattam Oru Iruttarai, which was directed by SA Chandrasekhar himself. Vijay was seen as a child artist in the original. Considering this and to add commercial value, he is casting Vijay in a guest role, says a source.

However, SAC has said that we have to wait till the movie hit the screens to know whether Vijay has done a cameo or not. The movie features Sathyaraj, Seeman, Vikranth and others in the key roles
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, February 3, 2011

Vijay latest interview for ananda vikatan


காவலன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஆளும்கட்சிக்காரர்கள் மிரட்டினார்கள் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.


சமீபத்தில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்’ படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையைச் சொல்ல முடியாது.


'காவலன்’ படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்’ படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!


தியேட்டர் அதிபர்களுக்கு மிரட்டல்...


வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்’ படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!''

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்’னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்’ வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்'' 


கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை...


''சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க. 

'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை’ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது’ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது. 

என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்.

ஆளும்கட்சியினர் மிரட்டல்...

''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?

இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.

அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்’ ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!


காந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்!


சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!


தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.


எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.


அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.


முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' 


அரசியலுக்கு பலமான அஸ்திவாரம்...


நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.


யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்.


யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.


சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!", என்று கூறியுள்ளார் விஜய்.


நன்றி: ஆனந்த விகடன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்


வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.

பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி "காவலன்" படம் விளம்பரம் இன்றி விண்ணைத் தொட்டது. பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் சூப்பர்ஹிட்.



இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜுன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ஏற்கனவே அஜித்தின் "மங்காத்தா" படம் அவரது பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, February 2, 2011

கண்ணபிரான் with அமீர்


ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவான் படத்தை இயக்கி வருகிறார் அமீர். நீது சந்திரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் இரு ஷெட்யூல்ட்கள் பாங்காங்கில் நடந்தன. 

ஆதிபகவானுக்குப் பிறகு அமீர் விஜய் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் விஜய்யை சந்தித்த அமீர் அவ‌ரிடம் கதையொன்றை கூறியிருக்கிறார். விஜயக்கு கதை பிடித்திரு‌க்கிறது. சேர்ந்து படம் பண்ணலாம் என அவர் உறுதி அளித்ததாகவும் கூறுகிறார்கள். படத்தின் பெயர் கண்ணபிரான்.

இதன் காரணமாக விஜய்யை அமீர் கண்டிப்பாக இயக்குவார் என்ற செய்தி உலவுகிறது. தற்போது விஜய் வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

ஷங்கர் - விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!

Vijay
விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

UK - முதலிடத்தில் காவலன்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் ஆடுகளம், சிறுத்தை இரண்டையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் காவலன்.


முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 55வது இடத்தைப் பிடித்த ஆடுகளம் சென்ற வாரம் 81வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் மொத்த யுகே வசூல் 4.663 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 3.39 லட்சங்கள்.முதல் வாரத்தில் 27வது இடத்தைப் பிடித்த சிறுத்தை சென்ற வாரம் 43வது இடத்தை கைப்பற்றியுள்ளது. இதுவரை இப்படம் 40,256 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் சுமார் 29.31 லட்சங்கள்.


சென்ற வாரம்தான் காவலன் யுகே-யில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தை பிடித்துள்ளது. இதன் வசூல் 43,345 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் சுமார் 31.55 லட்சங்கள்.


முதல் வாரத்திலேயே முப்பது லட்சத்துக்கு மேல் வசூல் செய்ததால் காவலன் யுகே-யில்
75 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யும் என நம்பப்படுகிறது.


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

சுறுசுறு விஜய்

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அரசியல் பிரஷர் என்று பல வாரங்களாக அல்லாடிக் கொண்டிருந்த விஜய் மீண்டும் சுறுசுறுப்புக்கு வந்திருக்கிறார்.

காவலன் எதிர்மறையான விமர்சனத்தை சில இடங்களில் கிளப்பினாலும் இப்போது படம் பிக்கப்பாகியுள்ளது. எவருக்கும் காவலனால் நஷ்டம் ஏற்படாது என்பது தெ‌ரிந்த பிறகே இளைய தளபதியின் முகத்தில் உற்சாகமே பிறந்துள்ளது. இதே ஸ்பீடில் வேலாயுதம் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பை பொறுத்தவரை ஏறக்குறைய முடிந்துவிட்டது.

ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலும் விஜய் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். வரும் 7ஆம் தேதியிலிருந்து ஷங்கர் படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார். 

வேலாயுதம், 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டுமே நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை விஜய்க்கு இருப்பதால் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்.
Source : WebDunia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Tuesday, February 1, 2011

LETTER TO ACTOR VIJAY FROM AUSTRALIA

Dear Vijay Sir,

We were eager to contact you to confirm the news that you are back in 3 Idiots. After seeing that news we were excited and jumped with joy. If the news is true we will celebrate this in Australia as a festival. We prayed in all the temples that we need you to act in 3 Idiots. We have contacted the entire fan members in Australia including Sydney, Melbourne, and Brisbane and we, as fans, kindly request you to accept the offer of 3 Idiots and we assure that it will be the biggest hit in your career than Gilli and Kathalukku Mariyathai. We have seen that you thanked online fans, and if you want to do anything for your fans, please accept this 3 Idiots and adjust your dates and do whatever Shankar sir says; please we need to see you reach great heights.

We also request you to release the trailer in Australia and Australian Vijay fans club will take the full responsibility and expense. If you confirmed 3 Idiots, we will make it big in Australia. We have also decided to donate meals for 500 poor children in India on the day of its release. Please accept the 3 Idiots and this is what everyone of your fans expect from you sir.

With lots of Love,
Vijay fans Club, Australia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

3 Idiots சுவாரஸ்யமான news


3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.
இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.
ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார். 

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

3Idiots as நண்பன் in TAMIL


Shankar’s official remake of 3 Idiots will be called Nanban. After months of speculations about Shankar’s choice of actors for the project, an official announcement is released recently confirming the presence of Vijay, Jiiva and Srikanth in the movie. Nanban is produced by noted banner Gemini Film Circuit.

Nanban will also have Ileana, Sathyaraj and Sathyan in important roles with SJ Suryah, Anuya and Ajay Rathinam in cameos. Shooting has already begun with scenes involving Jiiva, Srikanth, Sathyaraj, Sathyan and SJ Suryah being shot in Ooty. Vijay will join the crew from 25th February. Manoj Paramahamsa wields the cinematography baton while Harris Jeyaraj will score music for Nanban.

Source : Behindwood
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, January 31, 2011

Vijay to join 3 Idiots camp on Feb 7th


Finally, Vijay will be joining the 3 Idiots camp on February 7th, 2011! Shankar and team are presently camping in Ooty where the 3 Idiots remake is being filmed and Vijay will join them early next month.

The film’s music director Harris Jayraj has scored a song already and this will be filmed on the lead pair Vijay and Ileana on his first day on the sets. After all the hype and hoopla and rumors surrounding the 3 Idiots remake, it is now certain that it is safely tucked under Vijay’s belt.

There was a lot of speculation on who would don the lead role in this remake, which was originally done by Aamir Khan in Hindi, with names like Vijay and Suriya hitting the spotlight. Finally, it fell into Vijay’s kitty!

அரே பையா ஆல் இஸ் வெள் ....................
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

How Vijay came back to 3 Idiots ?

Gemini Film Circuit and Shankar had initially signed up Vijay to do the Tamil version of the blockbuster Aamir Khan's Rajkumar Hirani directed 3 Idiots. 

Later Vijay walked out of the film sighting  'date reasons' and rumours of Shankar not happy with the star's reluctance to go for a new look.

At that time, Suriya was roped into the project by Shankar. Suriya's only condition for doing the film was his salary (rumoured to be Rs 12 Crore) plus the Telugu dubbing rights (today's market rate Rs 8 to Rs 10 Crore). 

GFC was not willing to give the dubbing rights as they hold the 3 Idiots remake rights for Telugu and was planning to do it with Mahesh Babu.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, January 30, 2011

3Idiots Vijay and Surya ??


என்னடா புதுசா இருக்கு


In a decision made by makers and producers of the Tamil version of ‘3 idiots’, Suriya is out of the film since he demanded a hefty sum of Rs. 8 crore and also the share in profit derived from the Telugu film which is calculated at Rs. 10 crore for Suriya alone.
This hefty demand had made the producers resort to Vijay since Suriya’s demand had come as a shocker to Gemini Film Circuit. Suriya’s market in the Telugu Film Industry and Andhra Pradesh was huge and so, the actor made the demand.
Now, when the producers returned to Vijay who was earlier willing to act in the film, the makers and producers also made another decision to introduce a fourth character besides Vijay, Jiiva and Srikanth. Here, Suryah is said to play the fourth character.
What could be seen as a crazy decision by the producers also has potential to work in favor of the film. It is not Suriya who will be part of the film but it is the sex-crazy SJ Suryah who will be playing the fourth character in the film.
Reporters will be queuing up on Shankar to ask him if this decision would help him fetch mass audiences including women to the theaters since they would be petrified with the presence of SJ Suryah in the film. Hopefully, this decision is expected to work.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

3IDIOTS ல் நம்ம தளபதி உறுதியாகிவிட்டது

அப்பாடா ஒரு வழியா Confirm ஆக்கிட்டாங்க  டோ !!


YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

NEW CHANNEL FOR GLOBAL VIJAY FANS

HI FRIENDS,

I  have designed a new channel for global vijay fans.
Let me frequently share the latest videos in this channel. 

இந்த Channel பத்தி உங்களுடைய கருத்துக்களை கொஞ்சம் SHARE பண்ணுங்க.



Thanks for your support.
Vijay Fan from USA
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE