Pages

Monday, February 21, 2011

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க...! - விஜய் அறிக்கை

Vijayதனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 'சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்', என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம். 
கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.
அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். 

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும். 

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

Thanks : OneIndia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!


Vijayதமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாளை நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.


தமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.


இந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay-All set for his political entry!

After dilly dallying for months,Ilayathalapathi Vijay is all set to enter the murky world of Tamilnadu politics. Vijay will be making his first political foray tomorrow (February 22) at a public meeting in Nagapattinam.Vijay will be speaking about the explosive issue of the "attitude of Sri Lankan government towards Tamil Nadu fishermen".

The TN fishermen issue is a very sensitive issue in coastal Tamil Nadu as it has resulted in the death of local fishermen in the hands of the Sri Lankan army.  In a recent interview to a Tamil tabloid, Vijay has hit out at the DMK government and the way the first family is controlling Kollywood.  

Remember how Vijay went through hell trying to release his Pongal filmKaavalan. To drum up support with opposition parties for the Nagapattinam meet, Vijay father SA Chandrasekhar met up with ADMK supremo J Jayalalithaa at her Poes Garden residence on Saturday.  

He wanted the support of Jayalalithaa and her party for the protest meet.

Thanks : Sify
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, February 20, 2011

ஜெயலலிதாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.


 கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.


 மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து விஜயின் மக்கள் இயக்கம், வரும் 22-ம் தேதி நாகை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

வந்தியத்தேவனாக விஜய்.........


கடந்த பத்து நாட்களுக்கு முன்பே நம் காதுகளை எட்டிய தகவல்தான் என்றாலும் இது புரளியாகவும் இருக்கலாம் என்று மணிரத்திரனம் அலுவலகமான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொல்லட்டும் என்று காத்திருந்தோம். இப்போது மிகவும் நம்பிக்கையான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் அந்த வதந்தியை உறுதி செய்கிறது. ஆமாம்! மணிரத்தினம் சன் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில், அந்த நாவலின் முதன்மைக் காதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனாக இளைய தளபதி விஜய் நடிப்பது 90% உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விஜய்க்கு பொன்னியின் செல்வன் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவரது அப்பா எஸ்.ஏ.சி மூலம் பொன்னியின் செல்வன் கதை சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு எஸ்.ஏ.சியின் முன்னாள் உதவியாளர்களில் ஒருவரான வருண் என்பவர் மிகவும் உதவியதாகவும் தெரியவருகிறது.

விஜய்க்கு வந்தியத்தேவன் என்றால் நாவலின் தலைப்பான பொன்னியின் செல்வனாக அதாவது ராஜாராஜ சோழனாக சியான் விகரம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ராவணன் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு பொன்னியின் செல்வன் ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலை படிக்கக் கொடுத்து இதிலில் உள்ள நான்கு முக்கிய காதாபாத்திரங்களில் உனக்கு எது வேண்டுமோ நீயே தேர்வு செய்து கொள் என்றாராம் மணி. இப்படி விக்ரமே தேர்வுசெய்த கதாபாத்திரம்தான் ராஜராஜன் என்கிறார்கள். அதேபோல விஷாலும் ஒரு பாத்திரத்தில் நடிப்பார் என்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உத்தமச்சோழனாக (மதுராந்தகத் தேவர்) நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது.

இந்தப் பட்டியல் நம்பகமான வட்டத்திலிருந்து கிடைத்தாலும், அதிகாரபூர்வமாக உறுதி செய்ய்யும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் HIT

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் சூடு பிடித்திருக்கின்றன

மணிரத்தினம்- சன் பிக்ஸர் கூட்டுத்தயாரிப்பாக பலநூறு கோடியில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைவடிவம் பெற இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மணிரத்தினம் அலுவலகத்தில் விசாரித்தால், 

தற்போது இது ஸ்கிரிப்ட் என்ற கட்டத்தில்தான் இருக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து ஸ்கிரிப்டை இறுதிபடுத்தி வரும் மணி ரத்தினம், 

திரைவடிவத்துக்காக நாவலின் சம்பவங்களில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆலோசித்து வருகிறாராம். இந்தப்படத்தில் விகரம் மட்டுமே தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. 

மேலும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்க இருக்கிறார் என்று வெளியாகும் தகவல்கள் பற்றி இப்போதைக்கு மனி அலுவலகத்தில் வாயைத்திறக்க மறுக்கிறார்கள்.  

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Saturday, February 19, 2011

Vijay Vanthiyadevan,Vikram Raja Raja Cholan in Ponniyin Selvan


Ponniyin Selvan characters revealedEarlier we broke the news of Vijay playing Vanthiya Devan for Mani Ratnam’s upcoming 200 crore magnum opus flickPonniyin Selvan.

 ‘Ilayathalapathy’ Vijay will be playing powerful Vallavarayan Vanthiyadevan’s role(the real hero of the story), ‘Chiyaan’ Vikram will make a strong presence asPonniyin Selvan(Raja Raja Cholan), and Vishal will portray the famous Adhitya Karikaalan(brother of Raja Raja Cholan). Mahesh Babu has an interesting character as he will be playing Uththama Chozhan in the movie.”

It may be worth mentioning here that a life sized statue depicting Vanthiyadevan(which Vijay is said to be playing) controlling a horse is erected in Chennai near Anna Flyover in Mount Road as an honour to this great personality during the first tenure of Mr. Karunanidhi as Chief Minister.

There was also news that Mani Ratnam is trying his best to bridge the gaps between Isaignani Ilayaraja and Isai Puyal AR Rahman to give his fans a historical musical extravaganza for the movie which is an adaptation of the Kalki novel of the same name.

Hold your breath people, the party already looks wild. Heehaw!!!

Thanks : http://www.kollytalk.com/cinenews/vijay-vanthiyadevanvikram-raja-raja-cholan-in-ponniyin-selvan/?utm_source=twitterfeed&utm_medium=twitter
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

பொள்ளாச்சியில் விஜய்! அ.தி.மு.க.வினர் உற்சாகம்!!


வேலாயுதம் பட சூட்டிங்கிற்காக கிணத்துக்கடவு பகுதியில் முகாமிட்டிருக்கும் நடிகர் விஜய் பொள்ளாச்சிக்கு திடீர் விசிட் அடித்தார். விஜய் வருகையால் அவரது ரசிகர்கள் அடைந்த உற்சாகத்‌தை விட, அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள் ரொம்பவே உற்சாகமடைந்தனர்.
கிணத்துக்கடவு கோவில்பாளையம் பகுதியில் வேலாயுதம் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சூட்டிங்கை சீக்கிரமே முடித்துக் கொண்டு, பொள்ளாச்சிக்கு திடீர் விசிட் அடித்தார் விஜய். அங்கு காவலம் படம் ஓடும் தியேட்டர் ஒன்றிற்கு வந்த விஜய்யை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். ரசிகர்களுக்கு இணையாக அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகத்துடன் விஜய்க்கு வரவேற்பு கொடுத்து, வாழ்த்து கோஷமிட்டனர்.
பின்னர் தியேட்டரில் திரைக்கு முன் தோன்றி நடிகர் விஜய் பேசும்போது, தன் வருகையை அறிந்து ஆர்வமுடன் வந்து வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும், அ.தி.மு.க. கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கூறுகையில், நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங்ணா… சொல்லுங்ணா… என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற ஊர்களில் நடக்கும் சூட்டிங்கில் கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன்படுத்துவோம்.
ஆனா பொள்ளாச்சியில் மட்டும்தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். காவலன் படத்தில் குத்துப்பாட்டு இல்லை என்று ரசிகர்கள் சிலர் கவலை தெரிவித்தனர். அடுத்த படத்தில் கண்டிப்பாக அந்த குறை நிவர்த்தி செய்யப்படும், என்றார்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இலங்கைக்கு எதிராக நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவம் சிறை பிடித்ததைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். 
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, இலங்கை ராணுவம் சிறை பிடித்தது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.

இலங்கை ராணுவத்தினரின் அட்டூழியத்தைக் கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

"நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்குத் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்" என்று ரவிராஜா கூறினார்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Friday, February 18, 2011

Vijay the friend of Fishermen


A meeting will be organised by the Vijay People movement at Nagapattinam on February 22. The meeting is to be conducted by S.A Chandrasekaran, noted Film Director and father of Actor Vijay to condemn the killing of Indian fishermen by the Sri Lanka Navy. Vijay will be taking part in this event and will address the gathering after handing over financial help to the fishermen recently killed by Sri Lanka Navy.

This event will launch actor Vijay directly into the Tamil Nadu politics by portraying him as ” The friend of Fishermen” . He is passionately called by his fans as Ilaya Thalapathi , the Junior Commander. Now the commander is going to fight for Fishermen not in the silverscreen but on the shores of Bay of Bengal.

The following are the circumstances which gradually brought this young actor to the Tamil Nadu political scene crowded by many more film personalities.

Scene1: Vijay undertakes fast during the protest by film industry in support of suffering Tamils in Sri Lanka about two years back.

Scene2: Vijay meets Rahul Gandhi. But Vijay prefer not to join in Congress party which is identified as number 1 enemy to be defeated by Ealem supporters such as Seeman.

Scene3: Release of Vijay film Kavalan postponed many times allegedly to facilitate screening of films produced by DMK family.

Scene4: Vijay’s father S.A Chandrasekaran meets Jayalalithaa twice.

Scene5: Vijay directly criticizes DMK in an interview to Tamil weekly.

From these 5 scenes it is can be well understood that Vijay has almost decided to support AIADMK.

The sixth scene to be taken up by Vijay is expected to show the strength of his fan club at Nagapattinam, a sea side town, by next week.

Vijay has taken up the hot issue of fishermen which will be an important plank in the assembly elections to be held in May this year.

While the fishermen issue is going to help Actor Vijay as a launch pad in politics it should be thought of whether Vijay could in any way help in resolving the issue of Fishermen. Whether he is going to be another personality showing the concerns by writing letters, staging protests, undertaking fasts, delivering loud speeches etc or going to do some constructive works is to be seen. Vijay can go around Tamil Nadu for this issue to educate the inland people too to join hands with the fishermen community living along the shore.

If Vijay join hands with the civil society and other non political interest groups and make sensible moves in a way different from the political leaders, he will be most welcome by all to become a spokesperson of Fishermen community. That depends on what measures Vijay will suggest to resolve the fishermen issue during the meeting to be held at Nagapattinam.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE