Thursday, February 17, 2011
மணிரத்னம் படத்தில் இளையராஜா - ரஹ்மான்
இந்தத் தகவலைக் கேட்டபோது நம்ப மறுத்தது மனசு. ஆனால் சொன்னவர் படத்தின் முக்கியமான ஒரு நிர்வாகி என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை...நடக்கிறதோ இல்லையோ... இப்போது அதற்கான முயற்சிகள் ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவதால் இந்தத் தகவலை காதில் போட்டு வைக்கிறோம்...
தனது பொன்னியின் செல்வன் படத்தில் இசைஞானியையும், இசைப்புயலையும் இணைய வைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம்.
வந்தியத் தேவனாக விஜய், பொன்னியின் செல்வனாக விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷால் நடிப்பதாக இப்போதைக்கு முடிவாகியுள்ளது. உத்தம சோழன் எனும் பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவைத் தேர்வு செய்து, அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.
நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம்.
இன்னொரு பக்கம் டெக்னிகலாக இந்தப் படம் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் மணிரத்னம், முதல் கட்டமாக இசைத் துறையின் சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
பாடல்களுக்கான இசை ஒருவர், பின்னணி இசை மற்றொருவர் என்றில்லாமல், இரண்டையுமே இருவரும் இணைந்து செய்ய வேண்டும் என்று மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இருதரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்பதால், நகம் கடித்தபடி காத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்த புராஜெக்டில் பெரிய ஆறுதல் ஒன்றுண்டு... அது, படத்துக்கு வசனம் சுஹாஸினி அல்ல.. ஜெயமோகன்!!
Thanks : OneIndia
யுகே-யில் காவலன்
யுகே-யில் காவலன் குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் காவலனுக்குதான் அதிக வசூல் என்பது விஜய் தரப்புக்கு சந்தோஷம் தரும் செய்தி.
2வது வார இறுதியில் காவலன் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 29வது இடத்தைப் பிடித்திருந்தது. 3வது வார இறுதியில் 35வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 3வது வார இறுதியில் இதன் யுகே வசூல் 8,346 பவுண்ட்கள். ஒன்பது திரையிடல்களின் மூலம் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
இதுவரை காவலன் வசூலித்த மொத்த தொகை 1,19,998 பவுண்ட்கள். அதாவது நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 87.74 லட்சங்கள். ரஜினி, கமல் படங்களுக்கு அடுத்து விஜய் படங்களுக்கே யுகே-யில் அதிக வரவேற்பு என்பதை இந்த வசூல் உறுதி செய்திருக்கிறது.
Thanks : Webdunia
பொள்ளாச்சியில் விஜய்... அதிமுகவினர் வரவேற்பு!
நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய், தனது காவலன் படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் தியேட்ட ருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார் விஜய். பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். நிறைய ரசிகர்கள் விஜய்யுடன் கைகுலுக்க முண்டியடித்தனர். விசில் அடித்து துள்ளி குதித்தனர். அவர்களிடம் காவலன் படம் பற்றி விஜய் கேட்டார். படத்தில் குத்துபாட்டு இல்லையே என்று சிலர் குறைபட்ட போது, அடுத்தபடம் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் என்றார்.
விஜய் பேசுகையில், "நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங்ணா... சொல்லுங்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம்.
ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்", என்றார்.
நிகழ்ச்சியில் விஜய் நற்பணி மன்ற பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை விட பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அ.தி.மு.க.வினர்தான் விழாவில் அதிகம் பங்கேற்றனர். அதிமுக கொடியுடன் வந்து அவர்கள் வரவேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாடிமணி, அருணாசலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் முருகானந்தம் ஆகியோர் விஜய்யைச் சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் விஜய்.
Thanks : OneIndia
Wednesday, February 16, 2011
சிறுத்தையை துரத்தியது காவலன்
...என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய் என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது. ![]() அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி. பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய், அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம். இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக் கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன். இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.! தமிழ்நாட்டில் வெளியான பிறகே யுகே-யில் காவலன் வெளியானது. இப்படம் ஆடுகளம், சிறுத்தை படங்களைவிட அதிகம் வசூலித்தது மட்டுமின்றி இப்போதும் கலெக்சனை அள்ளி வருகிறது. முதல் வார இறுதியில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தைப் பிடித்த விஜய் படம் இரண்டாவது வார இறுதியில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் 11 திரையிடல்களில் இப்படம் 18,562 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரம் வரை இதன் மொத்த யுகே வசூல் 96,889 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 71.11 லட்சங்கள். 2011ல் வெளியான தமிழ்ப் படங்களில் இதுவே டாப் யுகே கலெக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. |
விஜய்க்கு எந்தக் குழப்பமும் இல்லை
கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம்.
‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா?
“அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி மகா மெகா ஊழலைச் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு ராசா கைதாகி இருக்கிறார். தப்பு செய்தவரை விட அதைச் செய்யத் தூண்டுவதுதான் மிகப் பெரிய குற்றம். தவறிழைத்தவர்களைக் காப்பற்ற நினைப்பது சட்டப்படி மோசமான குற்றம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வன்முறை அதிகமாகி விட்டது. ஆந்திராவில் ராயலசீமாவை ரத்த பூமியென சொல்வார்கள். இப்போது தமிழ்நாடும் ரத்தபூமியாகி விட்டது. போலீஸ் அதிகாரியின் பெண்ணைக் காதலித்த மாணவனைக் காணோமாம். காதலிப்பது குற்றமா? ஒரு அரசியல்வாதி வெற்றிபெறுகிற நிலையில், எதிர்த்தரப்பில் பணம் வாங்கிக்கொண்டு விலகி விட்டானாம்.
‘நீ இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டே, நான் இருநூறு கோடி வாங்கிக் கொண்டு விலகி விட்டேன்’ என்கிறான். இந்த நிலைமை மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’’
இதற்காகத்தான் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினீர்களா?’
“நான் சினிமாவுக்கு வந்ததே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். விஜய் என்கிற சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறான். விஜய்யின் பின் னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.
அவர்கள் வெறும் ரசிகர்களாக, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பிளாக்கில் டிக்கெட் வாங்கி விற்கக் கூடாது என்று நினைத்துத்தான் ‘மக்கள் தொண்டனாக’ மாற்றியிருக்கிறேன். இந்த மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய். நான், வழி நடத்திச் செல்கிற உந்து சக்திதான். எங்கள் இயக்கம் அரசியல் கலப்பு இல்லாமல் செல்கிற சமூக இயக்கம்.’’
அப்படியானால் ஜெயலலிதாவை இரண்டு தடவை சந்தித்தது ஏன்?
“இப்போது இந்த நாட்டுக்கு நல்ல அரசு தேவை என்கிற உணர்வில் இருக்கிறேன். அதை வெளிப்படுத்துவதற்காகத்தான் நான் அவரைச் சந்தித்தேன். களங்கமற்ற அரசு வேண்டும், லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும், ஊழல் அற்ற அரசு வேண்டும்என்கிறஎனது ஆசைகளை வெளிப்படுத்தத்தான் அவரைச் சந்தித்துப் பேசினேன்.’’
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைப்பதற்காக நீங்கள் ஜெயலலிதாவைச் சந்தித்த தாகவும் பேச்சு நிலவுகிறதே?
“விஜயகாந்த் எனது நல்ல நண்பர். எனக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். அவரை சந்தித்த போதும் நான் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேனோ அதைத்தான் சொன்னேன். மற்றபடி இடைத் தரகராகவோ, இணைப்புப் பாலமாகவோ நான் வேலை செய்யவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்கிற ஆசையில் சந்தித்தேன். அவ்வளவுதான்.’’
விஷய்யின் அரசியல் ஆசையில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறதே? அவர் அரசியலில் நேரடியாக இறங்கப் போகிறாரா, அல்லது வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்வாரா?
“விஜய்க்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவருக்கு இப்போது 35 வயதுதான் ஆகிறது. அவர் அரசியலுக்கு வருவதை நூறு சதவிகித மக்களும் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்கும்.
அதற்கான பக்குவம் விஜய்க்கும் நாற்பது வயதில்தான் வரும் என நினைக்கிறேன். இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியும். இப்போது எங்களுடைய பணி, மக்களை ஏமாற்றி சுரண்டுகிறவர்களை அடையாளம் காட்டுவது மட்டும்தான். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை, தூய்மையான ஆட்சியைத் தரக் கூடியவர்களை அடையாளம் காட்டும் பணி எங்களுக்கு இருக்கிறது.’’
தி.மு.க. மத்திய அமைச்சர் ஒருவர் விஷய்யை டில்லிக்கு அழைத்துச் சென்றபோது மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் விஷய் பழிவாங்கப்படுகிறார் என்கிற செய்தி உண்மையா?
“அந்த அமைச்சருக்கு விஜய்யை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். டெல்லியில் விஜய்க்கு மனக்கசப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை.
நானும், விஜய்யும் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, ‘அப்பாதான் அரசியலுக்கு வருவார். நான் இப்போது வரப்போவதில்லை’ என்று ராகுலிடம்விஜய் தெளிவாகவே சொல்லிவிட்டார். நான் மட்டும் அரசியலுக்குச் சென்று என்ன பயன்? எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும். எப்படி மக்களை அணுகுவது என்பதும் தெரியும். ஆனால் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் மக்கள் இயக்கத் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாமல் நான் மட்டும் பதவி வாங்கி என்ன பயன்?’’
வரும் தேர்தலில் நீங்கள் புதுக்கோட்டையில் நிற்கப் போகிறீர்களாமே?
“நான் நிற்பதைவிட எங்கள் தொண்டர்கள் எங்கே நிற்பார்கள் என்பதுதான் கேள்வி. அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் நிற்பது சுயநலம். மக்கள் இயக்கத் தொண் டர்களுக்கு ஏதாவது செய்தால் நான் முழு வீச்சில் தீவிர அரசியலில் இறங்குவேன். இது உறுதி!’’
உங்களுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் சமாதானம் பேசுவதாக கூறப்படுவது உண்மையா?
‘‘எம்.ஜி.ஆர். பவர்ஃபுல்லாக இருந்த நேரம். சட்டப் புத்தகத்தை எரித்ததாக கலைஞரைக் கைது செய்து விட்டனர். அப்போது என்னுடைய ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளிவந்தது. படத்தின் விளம்பரத்தில் கூண்டுக்குள் கலைஞர் இருப்பதைப் போலவும், கூண்டுக்கு வெளியில் ராதிகா நிற்பதுபோலவும் விளம்பரம் வெளியிட்டேன். அப்போது அரசியல் சார்பற்று இருந்த நான் எனக்கு நியாயம் எனப் பட்டதை செய்து காட்டினேன்.
அப்படியிருக்கும்போது என் மகனின் படத்துக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நடப்பது கலைஞர் ஆட்சியா, சன் டி.வி ஆட்சியா என்று நினைக்கிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதெல்லாம் அந்த முதலாளிக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் கீழே இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘காவலன்’ படம் ஓடக் கூடாது என் பதற்காக அவர்களின் தொலைக்காட்சியில் என் மகனின் பழைய திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். என் மகனின் முகத்தை அழிப்பதற்கு என் மகனின் முகத்தையே பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்னை வந்து சந்திப்பார்களா?’’ என்றார்.
Vijay roped in for Ponniyin Selvan?
According to reports, Vijay will portray the historical character from the Tamil historical novel 'Ponniyin Selvan' written by Kalki Krishnamurthy. Earlier, it was reported that actors Vikram and Mahesh Babu are playing the lead roles in the film. But the movie bosses are yet to confirm the news.
However, Ilaiyaraaja is scoring the music for the film. The movie is produced by Sun Pictures. Other details about the film are still under wraps.
விஜய்யுடன் - அதிமுக பிரமுகர்கள் சந்திப்பு
நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்துவருகிறது.படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் தனது “காவலன்” படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் விஜய் தியேட்டருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
‘’ நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங் கண்ணா... சொல்லுங் கண்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம்.
ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’’ என்று ரசிகர்கள் முன் பேசினார் விஜய்.
அ.தி.மு.க.வினரும் விழாவில் பங்கேற்றனர். அதிமுகவைச் சேர்ந்த கண்ணாடிமணி, அருணாசலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கிற முருகானந்தம் ஆகியோர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்தனர்.
Thanks : Nakkeran.
Thanks : Nakkeran.
Tuesday, February 15, 2011
'நாள் குறிச்சாச்சு'... ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்கும் விஜய் மன்றங்கள்
ஏக உற்சாகத்திலிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 22-ம் தேதி மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடத்தும் போராட்டத்தில் விஜய் பங்கேற்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதலும் உதவியும் வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர்.
இப்போதே தமிழகம் முழுக்க உள்ள மன்றங்கள் போராட்டத்துக்கு ஆள்சேர்ப்புப் பணியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் பிரச்சினையில் விஜய் களமிறங்கும் முதல் போராட்டம் என்பதால், ஆட்சியாளர்களை மிரள வைக்கும் அளவுக்கு பலம் காட்ட, பல ஊர்களிலும் உள்ள லோக்கல் பிரமுகர்களிடம் பேசி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். அவசியமாக இருந்தால் விஜய்யின் தந்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறாராம்.
இன்னொரு பக்கம் விஜய்யின் இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் கணிசமான அளவு குவிந்து விடாமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து போலீசாருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.
"இது உண்மையா... அல்லது அப்படி ஒரு திட்டம் ஆட்சியாளர்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அம்பலப்படுத்தி போராட்டத்துக்கான தடைகளை அகற்றும் உத்தியா என்று தெரியவில்லை", என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அதிமுகவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்!
இப்போதே தமிழகம் முழுக்க உள்ள மன்றங்கள் போராட்டத்துக்கு ஆள்சேர்ப்புப் பணியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் பிரச்சினையில் விஜய் களமிறங்கும் முதல் போராட்டம் என்பதால், ஆட்சியாளர்களை மிரள வைக்கும் அளவுக்கு பலம் காட்ட, பல ஊர்களிலும் உள்ள லோக்கல் பிரமுகர்களிடம் பேசி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். அவசியமாக இருந்தால் விஜய்யின் தந்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறாராம்.
இன்னொரு பக்கம் விஜய்யின் இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் கணிசமான அளவு குவிந்து விடாமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து போலீசாருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.
"இது உண்மையா... அல்லது அப்படி ஒரு திட்டம் ஆட்சியாளர்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அம்பலப்படுத்தி போராட்டத்துக்கான தடைகளை அகற்றும் உத்தியா என்று தெரியவில்லை", என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அதிமுகவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்!
Monday, February 14, 2011
HISTORY OF வந்தியத்தேவன்
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர்.
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
வந்தியத்தேவன், கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
மேலும் வேங்கையின் மைந்தன் என்னும் அகிலனின் புதினத்திலும், நந்திபுரத்து நாயகி என்னும் விக்கிரமனின் புதினத்திலும் வந்தியத்தேவனின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம்.
வந்தியத் தேவனாக விஜய்!
இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.
விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.
மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.
படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)




