Saturday, February 12, 2011
இலங்கை கடற்படைக்கு கண்டனம் : லட்சக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையால் நாகையச்சேர்ந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் வரும் 22ம் தேதி ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்கிறார்.
அன்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இலங்கை கடற்படைக்கு எதிராக கண்டன கோஷங்கள் விஜய் எழுப்புவார் என்று நாகை,திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய்யுடன், அவரது தாய்-தந்தை மற்றும் மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
நடிகர் விஜய் பட வழக்கு தள்ளுபடி
இயக்குனரும் தயாரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம் ஐகோர்ட்டில் “காவலன்” படத்தில் தயாரிப்பாளர் என்று தனது பெயர் இடம் பெறச்செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று நீதிபதி வி. ராமசுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
காவலன் பட தயாரிப்பாளர் ரமேஷ் பாபு சார்பில் வக்கீல் பி.எல். நாராயணன் ஆஜராகி ஷக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போடவில்லை.
பல்வேறு கொடுக்கல் வாங்கலில் அவர் பல முறைகேடுகள் செய்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து ஷக்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மீனவர்கள் போராட்டத்துக்கு தலைமை ஏற்கிறார் விஜய்
விஜயின் அரசியல் பிரவேஷம் இப்போதைக்கு இல்லை என்று அவரது தந்தை அறிக்கை கொடுத்த சூடு ஆறுவதற்குள் அரசியல் களத்தில் குதிக்கிறார் விஜய்.
காவலன் எதிர்பார்த்ததைப் போல பெரிய வெற்றியை எட்டிவிட்ட நிலையில் தனது அரசியல் நகர்வுகளை ஒவ்வொன்றாக முன்னெடுக்க இருக்கிறார் விஜய்.
இதற்காக இம்மாதம் 22-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் மீனவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கிறார் விஜய்.கடந்தமாதம் பொள்ளாச்சியில் நடந்த வேலாயுதம் படப்பிடிப்பில் விஜயை காணும் ஆவலோடு தினசரி இருபதாயிரம் பேர் திரண்டதில் கடுப்பான காவல்துறை தடியடி நடித்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறது.
இதைக்கேள்விப்பட்ட விஜய், காவல் நிலையத்துக்குச் சென்று தனது வருத்தத்தை பதிவு செய்திருகிறார். ஆனால் தடியடி நடித்திய செய்தி உள்ளூர் செய்தித் தாள்களில் வரமால் பார்த்துக்கொண்டிருக்கிறது உளவுத்துறை.
இப்படிப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் வலுவாக இருந்த விஜய் ரசிகர் மன்றத்தின் மீனவர் அணி, விஜயை அழைத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய பங்கேற்பாளராக வரும்படி அழைப்பு விடுக்க, உடனே யோசிக்காமல் ஒப்புக்கொண்டிருகிறாராம் விஜய்.
இம்மாதம் 22-ஆம் தேதி தமிழக மீனவர்களை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வரும் சிங்கள
நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்!
ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘3 இடியட்ஸ்’. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.
மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். நண்பன் படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘எந்திரன்’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.
இந்நிலையில் நண்பன் மேலும் ஒரு கெஸ்ட் ரோலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதலில் இந்த கெஸ்ட் ரோலுக்கு நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
Friday, February 11, 2011
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்திக்கச்செல்லும் நடிகர் விஜய்
சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன. இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதிக்கிறார். தேர்தலுக்கு முன் திருச்சியில் ரசிகர்கள் மாநாடு நடத்தி இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். அதன் பிறகு பிரசாரத்திலும் குதிக்கிறார்.
தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பணிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.அவர்கள் விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன் நாகப்பட்டினம் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து மீனவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கப்பட்டன.
இது போல் விஜய்யும் அங்கு சென்று மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்வார் என தெரிகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினம் கடலோர பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகிற 22-ந்தேதி விஜய் அப்பகுதிகளுக்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது விஜய் ரசிகர்கள் 1 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் வருவார்கள் என்று திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ராஜா கூறினார்
விஜய் பேச விலைகொடுக்கும் அதிமுக?
மூன்று ஆண்டுகள் கழித்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது அப்பா சொன்னாலும்,
தேர்தல் நேரத்தில் என்ன அலை அடிக்கிறது என்பதைப் பார்த்து அதிரடியாக தனது அரசியல் எண்ட்ரியை தொடங்க இருக்கிறார் விஜய்என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது.
அதிமுகவுக்கு சாதகமான அலை இருக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதன் மூலம் தனது நிஜ அரசியல் எண்ட்ரியை தொடங்குவார் என்கிறது அந்த நம்பகமான செய்தி.
பிப்ரவரியில் திருச்சியில் நடைபெற இருந்த விஜய் ரசிகர் மன்ற மாநாட்டை கேன்சல் செய்து விட்ட ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களை சுற்றுப்பயனம் மூலம் சந்திக்க இருந்த விஜய்,
அதையும் தற்போது ரத்து செய்து விட்டாராம். காரணம் தேவையில்லாமல் இப்போது அலைய வேண்டாம். பிரச்சாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் அதிமுக ஆதரவு பயணமாக அதை வைத்துக் கொள்ளுங்கள். மன்ற வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவையோ அதில் எந்த பேரமும் இல்லாமல் கொடுக்கத் தயார் என்று கூறிவிட்டார்களாம் அதிமுக தலைமை தரப்பில். இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறது விஜய் மன்ற வட்டாரம்.
இது ஒருபுறம் இருக்க... பொங்கல் ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் அள்ளிக்கொண்டிருப்பது சிறுத்தையா இல்லை காவலனா என்று அறிவிக்க கணக்கு வழக்கு பார்த்த்தில் சிறுத்தையை பின்னுக்கு தள்ளிவிட்டாரம் காவலன்.
இதுவரை 21 கோடி வசூல் செய்திருக்கிறதாம் காவலன். சிறுத்தை 16 கோடி. விஜய் கிட்ட மோத முடியுமா என்கிறார்கள் கனிசமாக லாபம் பார்த்து வரும் விநியோகஸ்தர்கள்.!
மீனவர் பிரச்சனையில் களம் புகும் நடிகர் விஜய்
தமிழக மீனவர்கள் படுகொலையைக் கண்டிக்கும் பொருட்டு, நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் களம் இறங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில்,
வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்மையில் மரணமடைந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு, அரசியற்கட்சித் தலைவர்கள் போட்டி போட்டுஉதவி வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் வரும் 22ந் திகதி, ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகத் தெரிய வருகிறது. இவ்வாறு அங்கு வரும் போது ஏற்பாடு செய்யப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஜயின் அரசியற் பிரவேசம் என்பது பிற் போடப்படடுள்ள நிலையில், மக்கள் நலன் நிகழ்வாக இவை தெரிவிக்கப்பட்டாலும், இத அவரது அரசியல் தொடர்பான ஒரு நகர்வாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் பிரச்சாரத்து விஜய் அழைக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் இருக்கும் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் எல்லாம் மீனவர் பிரச்சனையில் அமைதி காக்கையில், விஜய் தொடங்க நினைப்பதை, முழுமையான அரசியல் நிகழ்வாகக் கருத முடியாவிட்டாலும், ஒரு முன்னோட்டமாக கருத முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பின்னதாக விஜய் மேற்கொள்ளும் பெரும் ஆர்ப்பாட்டமாக இது இருக்கும் எனுவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் மனைவி சங்கீதா, விஜய் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா, உட்பட விஜய் ரசிகர் மன்றங்களின் பிரதிகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து
Thursday, February 10, 2011
VIJAY SUPPORT FOR AIADMK
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. காவலன பட ரிலீசின் போது ஏற்பட்ட தடைகள் அவரை அ.தி.மு.க. பக்கம் சாய்த்து உள்ளது. ஓரிரு வாரத்தில் ஜெயலலிதாவை விஜய் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.தற்போது பொள்ளாச்சியில் “வேலாயுதம்” படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். 20-ந் தேதிக்குள் அந்த படம் முடிந்து விடும் என தெரிகிறது.
அதன் பிறகு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார் என்று பேசப்படுகிறது.
இந்த பயணத்தின் போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபடுமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்வார் என தெரிகிறது.
நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்க சுற்றுப்பயணம்
நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஆயத்தப் பணிகள் ரகசியமாய் நடக்கின்றன. இரு மாதங்களுக்கு முன் ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை சென்னைக்கு அழைத்து பேசினார். அவர்கள் ஒட்டு மொத்தமாக விஜய் அரசியலில் ஈடுபட வற்புறுத்தினர். ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வாக்காளர்களை விஜய்க்கு ஆதரவாக திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஆயத்தப் பணிகள் ரகசியமாய் நடக்கின்றன. இரு மாதங்களுக்கு முன் ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை சென்னைக்கு அழைத்து பேசினார். அவர்கள் ஒட்டு மொத்தமாக விஜய் அரசியலில் ஈடுபட வற்புறுத்தினர். ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வாக்காளர்களை விஜய்க்கு ஆதரவாக திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது
குக்கிராமங்கள் வரை இந்த இயக்கத்தின் கிளை அமைப்புகள் துவங்கப்பட்டு விட்டன. அரசியல் கட்சி துவங்கும் பட்சத்தில் இவற்றை அப்படியே வட்ட, பகுதி, மாவட்ட கழகங்களாக மாற்றி விடலாம் என்று விஜய்யிடம் ஆலோசனை சொல்லப்பட்டதாம்.
தற்போதுள்ள சூழலில் தனிக்கட்சி துவங்குவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பதே விஜய் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கேள்விகளாய் உள்ளன. கட்சி துவங்குவதற்கு இன்னும் சில காலம் போகட்டும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
அதே நேரம் இந்த தேர்தலில் தனது பங்களிப்பும் ரசிகர்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என கருதுகிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது அவர் இலக்காக தெரிகிறது.விஜய் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இரண்டு முறை ஜெயலலிதாவை சந்தித்து விட்டார். அவர் கட்சியில் இணைந்து ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவார் என பேச்சு நிலவுகிறது.
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.“காவலன்” பட ரிலீசின் போது ஏற்பட்ட தடைகள் அவரை அ.தி.மு.க. பக்கம் சாய்த்து உள்ளது. ஓரிரு வாரத்தில் ஜெயலலிதாவை விஜய் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
தற்போது பொள்ளாச்சியில் “வேலாயுதம்” படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். 20-ந் தேதிக்குள் அந்த படம் முடிந்து விடும் என தெரிகிறது. அதன் பிறகு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இரு மாதங்களுக்கு முன் இதுபோல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு ரசிகர்களை சந்தித்தார். உதவிகளும் வழங்கினார். அதே மாவட்டங்களுக்கு மீண்டும் சென்று ரசிகர்மன்ற கூட்டங்களில் பேசுகிறார்.
அப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபடுமாறு ரசிகர்களை வற்புறுத்துவார் என தெரிகிறது. தேர்தல் பிரசார சுற்றுப்பயணமாகவும் அது இருக்கும் என்றும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது. விஜய்யை வரவேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதா, விஜய் படங்களுடன் ரசிகர்கள் பேனர்கள் வைக்க துவங்கி உள்ளனர்
Wednesday, February 9, 2011
Vijay busy with Velayudham & Nanban
Ilayathalapathy Vijay is busy shooting for Velayudham in Pollachi along with sensuous beauty Hansika Motwani.
He is right now shooting for a superb peppy mass number just like kuthu song in Vijay’s style. The film will be wrapping up the talkie part with the Pollachi schedule. Vijay will move to abroad to complete two songs in the exotic foreign locales. As of now everything is moving on the right track and so the film will surely reach the screens on the eve of Vijay’s birthday, June 22nd. His fans from near by places are reaching Pollachi to meet their ardent star and are cheering up the unit. Vijay will make his next move to Shankar’s Nanban for a 20 days shoot in Ooty and Coimbatore by the end of February
Subscribe to:
Posts (Atom)





